1/31/08

Latest Update:Gordon Brown to meet HINDRAF leader Mr.Waythamoorthi.


1st Feb 2008,Mr.Murugesh an HINDRAF supporter with 4 others will stage hunger strike in Trafalgar Square in London.And we are also understand that about 1000 people will gather at Downing Street(where Mr.Brown's office is located).

And some sources saying that British PM official had been approached by HINDRAF,and the officials gave positive reply where 6 of the represantives(Including Mr.Waythamoorthy,HINDRAF chief) were invited to closed-door meeting.Some unconfirmed news are saying that Mr.Gordon Brown himself will meet the 6 represantives.

As we all known,about 150 years before,British had brought Indians to then Malaya as labourers for their rubber estates.Most of the Indians came to Malaya stayed,and became part of uniqe nation.And even after 50 years the colonialize powers left the country,but indians situation in the country is still same as 50 years ago.Further more,Indians were marginalised in past 50 years.

Aware or not,British goverment should take responsiblity for our situation.And they're(British Govt) ready to talk with us.

But the great Malaysian BN Govt(led by UMNO) is not ready even to discuss about our plight.What they did was,snubbed HINDRAF for once and all.Even after Indians showed their dissatisfaction during Nov 25th Eye Opener Rally,Malaysian govt still argues that it's not true!!

This what BN leaders proud-off always,sincere!!!

While the nation that brought us to Malaya is sincere in settling our problems,the nation(tanah tumpah nya darahku) that home for us for past two century,snubbed us!!
But we'll continue to struggle and win the fight for the rights!!

Makkal Sakthi Vellum!!!

வெற்றியை நோக்கி நம் பயணம்.......


ஆகக் கடைசியாக எனக்கு கிடைத்த தகவல்.....
நாளை,பிப்ரவரி 1ஆம் தேதி,பிரிட்டனின் டால்ஃபாகர் ஸ்குவேர் எனுமிடத்தில்,முருகேஷ்(ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்) என்பவரும் மேலும் 4 பேரும் இணைந்து உண்ணாநிலை போராட்டம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.அன்றைய தினம்,டவ்னிங் ஸ்ட்ரீட்டில் அமைந்திருக்கும் பிரிட்டன் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பு ஏறக்குறைய 1000 பேர் கூடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் பிரிட்டன் பிரதமர் துறை அதிகாரிகள் ஹிண்ட்ராஃபின் பிரதிநிதிகளை(வேதமூர்த்தி அவர்கள்) சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளனர்.பிரதமர் கோர்டன் பிரவுன் அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களை சஞ்சிக்கூலிகளாக மலாயாவிற்கு கொண்டு வந்த பிரிட்டன்,அதன் விளைவுகளைக் கண்டு இன்று மனம் இறங்கியிருக்கிறது.அவர்களின் பிரதமர் நம்மை சந்திக்க தயார்,ஆனால் தொடர்ந்து 50 வருடங்கள் நம்மை ஒதுக்கி,ஒடுக்கும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைவரான பிரதமர் நம்மை சந்திக்க மறுக்கிறார்!!

நமது பயணத்தின் முதல் வெற்றி தொடங்கி விட்டது.
இனிமேல் நமக்கு வெற்றி மேல் வெற்றிதான்.

மக்கள் சக்தி வெல்லும்!!!

Dr.M says......and........I says,


On Marginalised Indians......Dr.M says,
I wont agree that Indians are marginalized in this country.But I will say MIC doesn’t represent Indians in proper way.MIC’s argument that it is a sole represent of Indians is not true.They’re not allowin other Indian parties or NGOs to represent Indiabs.They want to be conquerors of Indians in Malaysia.This led to Indians dissatisfaction.

On HINDRAF........Dr.M says,
Use of ISA against HINDRAF leaders is not appropriate.Goverment should talked with them at the first place.Goverment should discussed with them,debated with them.at the first place.Without listen to their plight and arguments,we can’t judge them.The sudden invoke of ISA against the HINDRAF leaders is not appropriate
.

On Nov 25th Rally........Dr.M says,
Indians are minority in Malaysia,and I Think,they’re desperate.They chosen street demonstration,cause I think there is no proper channel for them to voice out their frustration.

Atlast,
I've been waiting for Dr.M's comment on HINDRAF for all these while.Finally.

On Marginalised Indians........I says,
I dont agree,if Dr.M says no indians are marginalised.We can prove that we've been marginalised for a very long period.And during his(Dr.M)though indians achieved lot but also we were in slight discrimination and marginalisation.
And during Dr.M's reign the mini genocide did happened in Taman Medan.
And i don't understand how come an inteligent like Dr.M can deny this truths!!!

On HINDRAF.........I says,
100% correct.That is what we're demanding from the first place.We hope PM will listen to our plights.At first,they charged our youngsters under Attempted Murder charge,then put bail amount for our leaders at tens of thousands,and finally invoked draconian ISA against our leaders.
I still remember,during Dr.M's time as a premier,a chinese group in this country questioned special status of Malays as Bumiputera.Dr.M never threaten them with ISA,never called them THUGS,never ever use abusive words against them.But he held forums with the group.And the problem settled in easy way.Thats the differences between good leader and sleeping leader.

On Nov 25th Rally........I says,

Yes,we're minority,that is the reason for our struggles!!We've been marginalised cause we're minority,We,ve been permenatly colonialised cause we're minority,And we're desperate too.Desperate for equal rights,Basic Human Rights.

And our so called channel to voice out our desires is Make Indians Cry.And the channel is corrupted from head to toe. We came to streets,cause we knew Peoples Power wont lose.

Makkal Sakthi Vellum!!

1/29/08

மலேசிய அரசாங்கம் தலிபான்களுக்கு சமமானவர்கள் - HCUK




தலிபான்களை போல் நடந்து கொள்கிறது மலேசிய அரசாங்கம்.பாமியன் புத்தர் சிலையை தலிபான்கள் தகர்த்தது போல்தான் மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கையும் இருக்கிறது.இந்த நடவடிக்கையை மென்-தலிபானிஸம் என்றும் வகைப்படுத்தலாம்.
பல நூறு வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில்களின் வரலாற்று பின்னணியைக் கூட கருத்தில் கொள்ளாது இடித்துத் தள்ளும் மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது அடைப்படை மனித உரிமை மீறலாகும்.
இந்துக்கள் மட்டுமல்லாமல் மற்ற சிறுபான்மை மதத்தினரையும் அடிப்படை மனித உரிமைகளுக்கு உட்படுத்துகிறது மலேசிய அரசாங்கம்.
கடந்த நவம்பர் மாதம் கோலாலம்பூரின் வீதீகளில் தங்களின் உரிமைகளைக் கேட்டு போரடிய ஆயிரக்கணக்கான தமிழர்களை காட்டுத்தனமாக தாக்கியது மலேசிய போலிஸ்.
ஏறக்குறைய இரண்டு மில்லியன் தமிழர்கள் இனவாத மலேசிய அரசாங்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் அவர்களின் உடனடி தலையீடு அவசியமாகும்.
அனைத்துலக சமூகமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு,சுமுக தீர்வு காணவேண்டும்.

மேல் காணப்படும் செய்தியானது எனது தனிப்பட்ட கருத்து இல்லை.இந்த புகாரை கூறியிருப்பது ஐக்கிய ராச்சிய இந்து பேரவை(The Hindu Council of United Kingdom).கடந்த வெள்ளிக்கிழமை பத்திரைகளுக்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில் அப்பேரவையின் செயலாளர் திரு.அனில் பானோட் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனது கருத்தும் இதுதான்!!
பாமியான் புத்தர் சிலையை வரலாற்று சின்னம் என்று கூட பாராமல் வெடி வைத்து தகர்த்த தலிபான்களுக்கும்,பல நூறு கோவில்களையும்,அதற்குள் குடிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் சிலைகளையும் உடைத்து தள்ளிய மலேசிய அரசாங்கத்திற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

தலிபான்களின் அட்டகாசம் அடங்கி விட்டது,
மென்-தலிபானிஸத்தை நடைமுறைப்படுத்தும் மலேசிய அரசாங்கத்தின் அட்டகாசமும் கூடிய சீக்கிரத்தில் அடங்கும்.

மக்கள் சக்தி வெல்லும்!!

ஹிண்ட்ராஃப் முடிந்து விட்டதா??


ஹிண்ட்ராஃப் எப்போதோ ஆரம்பித்து,எப்போதோ முடிந்து விட்டது;ஹிண்ட்ராஃப் என்ற போர்வையில் மெழுகு வர்த்தியை ஏந்திகிட்டு போறாங்க,இது நமது கலாச்சாரம் அல்ல!!இதெல்லாம் அரசியல் கபட நாடகம்!!கோவில்களில் பிரார்த்தனைக் கூட்டம் என்ற போர்வையில் பிரச்சாரம் பண்றாங்க,இதெல்லாம் முறையில்லை!!

- திருவாய் மலர்ந்து இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு.

ஹிண்ட்ராஃப் எப்போது ஆரம்பித்தது என்பது மாண்புமிகு அமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை!!இருந்தாலும் கூறுகின்றேன்.......

ஏற்க்குறைய 5 ஆண்டுகளுக்கு முன்பு,மூர்த்தி என்ற ராணுவ வீரர் ஒருவர்(1998 எவரெஸ்ட் மலையேறும் திட்டத்திலும் இவர் கலந்து கொண்டவர் ஆவார்) மரணமடைந்த பின் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.மூர்த்தி என்பவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவி விட்டதாகவும்,ஆகவே மூர்த்தியின் சடலம் இஸ்லாத் முறைப்படித்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என,திடிரென்று அறிவிப்பு வந்தது மூர்த்தியின் ம்னைவிக்கு.அவர் அந்த நொடியில் எப்படி உடைந்து போயிருப்பார்??!

அப்பொழுது வழக்கறிஞர் சிவநேசன் அவர்கள் மூர்த்தியின் மனைவிக்கு உதவிக்கரம் நீட்டினார்.இந்த விஷயத்தை சட்டப்படி கையாள முடிவு செய்து கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தை நாடினார்கள்.ஆனால்,உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த அன்றைய தினமே,சிலாங்கூர் மாநில இஸ்லாமிய இலாகா மூர்த்தியின் சடலத்தை கோரி மருத்துவமனையில் மனுக்களை தாக்கல் செய்தது.அதற்கு மூர்த்தியின் குடும்பத்தாரும்,வழக்கறிஞர் சிவநேசனும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பொழுதிலும்,மருத்துவமனை அதிகாரிகள் சடலத்தை இஸ்லாமிய இலாகாவிடம் ஒப்படைக்க தயாரானர்கள்.அங்கு ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து ஏற்க்குறைய 2000(குல்லா அணிந்த) இஸ்லாமியர்களை மருத்துவமனைக்கு வெளியில் குவித்தது சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா!!!

அப்போது இந்த செய்தியை அறிந்து நம்மவர்கள் ஏற்க்குறைய 400 பேர் வழக்கறிஞர் வேதமூர்த்தி அவர்களின் தலைமையில் ஒன்று கூடினர்.அதுதான் ஹிண்ட்ராஃப்-இன் பிற்ப்பு.அவர்கள் 2000 பேர்,நம்மவர்களோ வெறும் 400 பேர்.அப்படி இருந்தும் அன்று அந்த சடலத்தை அவர்கள் கைப்பற்றி விடாமல் காத்தனர்.(அதன் பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் மூர்த்தியின் சடலம் இஸ்லாமிய இலாகாவிடம் ஒப்படைக்க பட்டது என்பது குறிப்பிட தக்கது.)

இது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை!!
எப்பவோ ஆரம்பித்ததாம்!!மன்னாங்கட்டி!!

எப்பவோ முடிந்து விட்டதாமே??உண்மையா??

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கனவு லோகத்தில் இருக்கிறாரோ??(இந்திர லோகத்தில் நா.அழ்கப்பன்,என்பதைப் போல் கனவு லோகத்தில் ச.சாமிவேலு என்று திரைப்ப்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)

அமைச்சரே,
வருகின்ற 16-02-2008 அன்று தெரியும் உங்களுக்கு முடிந்தது ஹிண்ட்ராஃபா அல்லது மஇகாவா என்று!!
எங்கள் தங்கமான் சிங்கங்களை சிறையில் அடைத்து விட்டு நீங்கள் விடும் வாய்ச்சவடால் இருக்கிறதே,தாங்க முடியலப்பா.ஹிண்ட்ராஃப் என்ற ஒன்று முடிந்து விட்டது என்பதை அதை வைத்து நீங்கள் கூறுகிறீர்கள்??அந்த ஐவரையும் சிறையில்தான் உங்களால் அடைக்க முடிந்தது,அவர்கள் எங்களுக்குள் விதைத்த எழுச்சியை உங்களால் ஒன்றும் செய்து விட முடியாது!!அதன் வெளிப்பாடுதான் நாடளாவிய நிலையில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டங்கள்!!அதைக் கண்டும் வயிற்றெரிச்சல் உங்களுக்கு!!


எத்தனை இடங்களில் பிரார்த்தனை கூட்டங்களை தடுத்து நிறுத்த உங்களின் அடிவருடிகள் முயன்றனர்,முடிந்ததா உங்களால்??
முடியவில்லையே!! ஏன்??

ஏனென்றால்,இந்த எழுச்சிக்குப் பெயர் மக்கள் சக்தி!!
மக்கள் சக்தி,மகேசன் சக்திக்கு சமம்!!!

பிறகு,மெழுகுவர்த்தி ஊர்வலத்தை பற்றி கூறியிருக்கிறீர்கள்!!
மெழுகுவர்த்தி ஏந்தி நடப்பது அமைதியின் அடையாள்ம் என்பது உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட ஒன்று என்பது உமக்கு தெரியாதோ??அது நமது க்லாச்சாரம் இல்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்,பொய் சொல்வது மட்டும் நமது கலாச்சாராமோ??(பத்துமலையில் 9,50,000 பேர் என்றீர்களே!!)

கோவில்களில் அரசியல் பிரச்சாரம் நடக்கிறது என்று கொதித்திருக்கிறீர்,இவ்வளவு நாள் நீங்களும் உங்கள் பட்டாளமும் கோவில்களில் அடித்த் கொட்டங்களை மறந்து விட்டீரோ??

நீங்கள் கோவில்களில் அரசியலை மட்டுமா நுழைத்தீர்,ஊழலையும் சேர்த்தல்லவா நுழைத்தீர்கள்!!(மிக சிறந்த உதாரணம்,கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானம்).

இன்று ஆலயங்கள் சமுதாய விழிப்புண்ர்வை ஏற்படுத்துவது உங்களுக்கு பொறுக்கவில்லை!!
உடனே தாண்டவம் ஆடுகின்றீர்கள்!!

ஐயா,சாமிவேலரே,
போதுமய்யா,போதும்!!!
இதோடு நிறுத்தி விடுங்கள்!!
மீண்டும்,மீண்டும் ஏதாவது உள்றிக் கொண்டிருக்காதீர்கள்!!
உங்கள் உளறல்கள் இனியும் எடுபடாது!!
ஏனென்றால்,
அரசாங்கம்தான் உங்கள் பக்கம்,ஆண்டவன் எங்கள் பக்கம்!!

மக்கள் சக்தி வெல்லும்!!

1/28/08

அன்பர் தின பேரணி- இரண்டாம் படையெடுப்பு.


நண்பர்களே,

எதிர்வரும் 16-02-2008 அன்று நாம் மீண்டும் படையெடுக்கப் போகின்றோம்.

ஆம்,படைதான் எடுக்கப்போகின்றோம்.


நாம் இப்பொழுது நடத்திக் கொண்டிருப்பது உரிமைக்கான அகிம்சைப் போர்;ஆகையால் நமது இரண்டாம் பேரணியை இரண்டாம் படையெடுப்பென்பது எந்த வகையிலும் தவறாகாது!!!


இந்த முறை நமது பேரணியின் கருப்பொருள்,அன்பர் தினம் என்பதாகும்!!

இந்த அன்பர் தின பேரணியின் முக்கிய நோக்கமே,இந்த மலையகத்தின் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதுதான்!!


நம்மை தீவிரவாதிகள் என்றும்,தேசத்துரோகிகள் என்றும் பழிப்பேசிய மூடர்களுக்கு நமது தேசப்பற்றை உணர்த்துவோம்.


இம்முறை பேரணிக்கு நாம் கொண்டு வர வேண்டியவை சிவப்பு நிற ரோஜாவும்,மஞ்சள் நிற ரோஜாவும் ஆகும்.

சிவப்பு நிற ரோஜாவானது இந்த தேசத்தின் மீது நாம் வைத்திருக்கும் நேசத்தின் வெளிப்பாடாகும்.மஞ்சள் நிற ரோஜாவானது நமது 5 சிங்கங்களை விரைவில் வெளியேற்றுமாறு கோரிக்கையை வலியுறுத்துவதாகும்.


ஆகவே,தோழர்களே,மீண்டும் ஒரு முறை தலைநகரில் கூடி நமது ஒற்றுமையை மீண்டும் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,நமக்காக போராடி இன்று சிறைச்சாலையிலும்,மருத்துவமனையிலும் வாடிக்கொண்டிருக்கும் அந்த 5 உன்னத மனிதர்களுக்கு நமது தார்மீக ஆதரவையும் புலப்படுத்துவோமாக!!


மக்கள் சக்தி வெல்லும்!!

1/26/08

மறந்தா விட்டோம்???


நடந்து முடிந்த தைப்பூசத் திருநாளை பெரும்பாலான தமிழர்கள் பத்துமலையில் கொண்டாடமல்,வேறு முருகன் ஆலயங்களிலும் கொண்டாடி மகிழ்ந்தனர்.எந்த வருடமும் இல்லாமல்,இந்த வருடம்,பத்துமலையில் மக்கள் கூட்டம் பேரளவில் குறைந்தது என்பதுதான் உண்மை!!!

ஆனால்,இந்த சமுதாயத்தின் சாதனைத் தலைவர் என்ற பட்டப் பெயரை,தனக்குத் தானே வழங்கிக் கொண்டு திரிந்துக் கொண்டிருக்கும் ஒருவர்,கூறியிருக்கிறார்,பத்துமலையில் இந்த வருடம் 9,50,000 பேர் வந்தார்களாம்!!!

என்னுடைய ஆங்கில மக்கள் சக்தி பிரிவில் இதை நான் ஏற்கெனவே கூறியிருந்தேன்.

இதை விட மிக நகைச்சுவையான விடயம் என்னவென்றால்,அவர் சொல்லியிருக்கிறார்,மலேசியத் தமிழர்கள் இன்னும் (மஇகா) இவர்களைத்தான் நம்புகின்றார்களாம்,இவர்கள் சொல்வதைத்தான் கேட்கிறார்களாம்.(காமெடியா இருக்கப்பா!!)

யாருடைய குறுஞ்செய்திகளும்,போராட்டங்களும் இவர்களையும்,இவர்களின் அடிவருடிகளின்(தேவஸ்தான) நிர்வாகத்தையும் ஒன்றும் செய்து விட முடியாதாம்!!

கடந்த 25 நவம்பர் 2007,அன்று இந்த மாமனிதர்களின் கொடுஞ்செயலால் நமது சமுதாயத்திற்கு ஏற்பட்ட துன்பத்தை நாம் மறந்து விட்டோமாம்!!

எங்களிடம் நன்கொடை,பங்கு பணம் என்று கோடி,கோடியாக எமாற்றி விழுங்கி இன்று சுகபோக வாழ்க்கை வழ்ந்துக் கொண்டிருக்கும் அந்த சிலர்,எங்கள் உடன்பிறவா உறவுகளை மிருகத்தனமான தக்குதலுக்கு உட்படுத்தியதை நாங்கள் மறந்து விட்டோமாம்!!

மலேசியத் தமிழன் என்றால் மரமண்டையன் என நினைத்து விட்டனர் போலும்!!

மடையர்களே,நாங்கள் மானமுள்ள மனிதர்கள்!!!
உங்களை நம்பி ஏமாந்த காலம் போய் விட்டது!!!
நீங்கள் செய்த அட்டூழியங்களை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட போவதில்லை!!!
எங்களின் ஒற்றுமை உங்களின் வயிற்றிலும்,உங்களின் அம்னோ முதாலாளிகளின் வயிற்றிலும் புளியைக் கறைக்கத் தொடங்கி விட்டதோ??

தினம் ஒரு பொய்,தினம் ஒரு புழுகு மூட்டை அவிழ்த்து விடுவதை விட்டு,வரப்போகும் ஓய்வுக்கலத்தில்(பொதுத்தேர்தலுக்கு பிறகு) என்ன செய்வதென்று சிந்தியுங்கள்,அல்லது உங்கள் மீது சாற்றப்படப் போகும் ஊழல் குற்றச்சாட்டுகளை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருங்கள்!!!

தலைவரே,உங்களின் தோல்வி உறுதி!!!
எங்களின் வெற்றியும் உறுதி!!!
ஏனென்றால்,
மக்கள் சக்தி வெல்லும்!!!

1/24/08

Talking about himself and his (MIC)cronies!!!

http://videos.thestar.com.my/default.aspx?vid=852

Samy vellu talking about himself,his son and his slaves(MIC members)!!!
Good joke Mr.Sam!!!!

My answer......
Your outbursts wont affect our fight for rights!!
Cause,our struggle is for noble cause,and people who threw hatred towards us is not so noble,so you're nothing but just an hounded d*g!!

நான் சொல்லும் பதில்,
கேவலமானவர்களின் தூற்றலும்,கீழறுப்புகளும் உன்னதமான போராட்டத்தையும்,போராட்டவாதிகளையும் ஒன்றும் செய்து விடாது!!!

Indians Should Unite,Samyvelu jokes in his Thaipusam Address.

This news i cut and pasted from yahoo news :
http://malaysia.news.yahoo.com/ap/20080123/tap-as-gen-malaysia-hindu-festival-b3c65ae.html

You all can analize,who is telling the truth......Samyvellu or Associated Press!!!
Well we know,that Sam doesn't know wat is truth!!!
1 million???Are You Kidding????
And about his Thaipusam Address,in which he called Malaysian Indians to be United,its a joke!!
Mr.Sam,we all are united,and thats the reason why,you came to the temple heavily bodyguarded by 50 FRU personnel!!!(normaly only 10 of your gangsters will bodygurad you!!)
And sudden disappearance of MIC Thanneer Panthal in Penang Thaipusam,shows that,Malaysian Indians are united under HINDRAF(Makkal Sakthi)and against UMNO slave MIC!!!

By JULIA ZAPPEI,Associated Press Writer AP - Wednesday, January 23
KUALA LUMPUR, Malaysia - Ten of thousands of pilgrims, some with skewered cheeks, gathered Wednesday for a Hindu festival dampened this year by a boycott among ethnic Indian activists discontent over the government's treatment of minorities.

After overnight prayers and preparations, pilgrims carrying kavadis _heavy frames decorated with beads and peacock feathers _ and brass pots with offerings of milk marched in processions to Hindu temples across the country to celebrate the Thaipusam festival.

But the main procession and prayers, which normally see nearly 1 million people gather at Sri Subamaniar Swamy Temple inside the limestone Batu Caves near Malaysia's biggest city, Kuala Lumpur, were this year the target of a boycott by ethnic Indian activists, who urged pilgrims to go to other temples in order to express their anger at the government.

Many ethnic Indians, who make up 8 percent of Malaysia's 27 million people, feel they face discrimination in jobs, education and business, and say they do not have full religious freedom in this Muslim-majority country.

About 60 percent of Malaysia's population is ethnic Malay Muslims. There is also a large ethnic Chinese minority that is mainly Buddhist and Christian.

"Rumors of riots and political problems kept people away. It's very dull ... usually you cannot walk around here," S.M. Mahndran, 50, said, pointing at empty spaces in the Sri Subamaniar Swamy Temple foreground.

Pilgrims were urged to gather at other temples instead of the Batu Caves, which are controlled by the Malaysian Indian Congress, a political party in the ruling National Front coalition. Indian activists accuse the MIC of not doing enough for the ethnic Indian community.

Shopkeepers around the Batu Caves, pilgrims and journalists said only about 30,000 to 50,000 people turned up this year.

There were no official estimates of the crowds, but MIC president Samy Vellu claimed a crowd of more than 1.1 million.

"The crowd is the usual crowd. I have come to Thaipusam for 60 years ... I am very, very happy," he said.

The simmering Indian discontent became evident on Nov. 25 when about 20,000 people held an unprecedented anti-government rally in Kuala Lumpur. Five leaders of the Hindu Rights Action Force, which organized the protest, were jailed under a law that allows indefinite detention.

1/23/08

தைப்பூசத்தில் நங்கள்.....

மிக விரைவில் செய்திகளும் படங்களும்........

தைப்பூசதிற்கு பொது விடுமுறையாம்........கோலாலம்பூரிலும்,புத்ராஜெயாவிலும் மட்டும்!!!

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவிப்பதைப் பற்றி கண்டிப்பாக நான் பரிசீலிப்பேன்!!!
இதுதான் மலேசிய பிரதமரின் பொங்கல் விழா உறையின் முக்கிய சமாச்சாரம்.இந்த அறிவிப்பானது மலேசிய தமிழர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை.மலேசியத் திருநாடு எஙகும் பெரும் விமரிசையாகக் கொண்டாடப் படும் தைப்பூசத் திருநாளுக்கு தேசிய பொது விடுமுறை என்பது புத்தாண்டின் மிகச் சிறந்த பரிசாக அமைந்திருக்கும்.ஆனால்,கிடைத்ததோ தேசிய பொது விடுமுறை அல்ல!!!!

தைப்பூச விடுமுறை,கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூருக்கும்,புத்ரா ஜெயாவுக்கும் மட்டும்தான்!!!

அதற்கு பிரதமர் கொடுத்திருந்த காரணம்,மிகச் சிறந்த காரணம் எனக் கூறலாம்.தைப்பூச தினத்தன்று மாநகரின் சாலைகள் எல்லாம் மிக நெரிசலாக உள்ளதாம்,அதனால் தைப்பூச விடுமுறை என்பது அவசியமாம்.அது சரி,கோலாலம்பூரில் சாலைகள் எல்லாம் நெரிசலாகி விடுகின்றது,புத்ரா ஜெயாவிலும் நெரிசல் மிக மோசமோ???அல்லது புத்ரா ஜெயாவில் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்களா??அல்லது புத்ரா ஜெயாவில் ஏதாவது முருகன் கோவில் உள்ளதா??அல்லது புத்ரா ஜெயாவில் தைப்பூசம் என்பது மிகப் பெரிய விழவா???

அப்பொழுது கெடா,பெர்லிசு,மலாக்கா,பஹாங்,கிளாந்தான்,திரங்கானு,சபா,மற்றும் சரவாக்கில் எல்லம் தமிழர்கள் இல்லையா???

அங்குள்ளவர்கள் எல்லாம் மலேசியர்கள் அல்லவோ???

ஒரு வேளை தேசிய முன்னனி அரசாங்கத்திற்கு அங்குள்ளவர்கள் தமிழர்கள் என்பது மறந்து விட்டதோ???

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை என்று சாமிவேலு என்ற மாமேதையின் ஆலோசனையின் பேரில்,ஆளும் தேசிய முன்னனி இனவாத அரசு,இந்த கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது!!!

சாமிவேலுவை நம்பி நாங்கள் ஏமாந்த காலம் போயே,போய் விட்டது என்பதை மாண்புமிகு பிரதமர் இன்னும் உணரவில்லைப் போளூம்!!!

எங்கள் சிங்கங்கள் எங்களை கடந்த 25 நவம்பர் அன்றே எழுப்பி விட்டு விட்டார்கள்,இனியும் நாங்கள் ஏமாற போவதில்லை!!

மக்கள் சக்தி வெல்லும்!!!

1/21/08

Thaipusam Holiday for Federal Terroteries(KL and PUTRAJAYA)





Thaipusam Holiday for Kuala Lumpur and Putrajaya!!!

What about other states that not given Public Holidays???
Especially Perlis???
Since Perak,Penang,Negeri Sembilan,Selangor,and Johor has declared Thaipusam as Public Holiday in their calendar,what about Kedah,Perlis,Pahang,Kelantan,Terengganu,Sabah,and Sarawak???

Is PM or UMNO led goverment saying that,no Indians are living in this states???
Or Malaysian Goverment thinks that Indians who are living in this states are not Malaysian and they dont need Public Holiday from Malaysian Goverment???

Our people all around the country deserves Public Holiday!!!

Dont just fool around Mr.PM.
We know this is your election tactics!!!
You want to regain our supports which you lose,during November 25th Permenantly Colonialised Malaysian Indians Eye Opener Rally!!!

Dont just think that,by announcing Thaipusam as Public Holiday for Federal Terroteries,infront of sell out crowd,you can win our hearts!!!!

We knew all this old cunning tactics!!!

We have our own cunning man in our community who we call semi value!!!

Malaysian Indians regardless,whichever states they're in deserves Public Holidays!!!

But,we still welcome your effort to win our hearts back,but what we need is sincerety and not cunning acts like this!!!

You're trying to satisfy our community which is hurt by your ignorance for almost 50 years!!!
And after,our beloved Heroes voice out our frustration,you're playing double-game!!!

Enough is Enough!!!

Time to win back whatever we deserve!!!

Fight for the rights will continue!!!

Makkal Sakthi Vellum!!!

1/20/08

பத்துமலை முருகா.....உன் பிள்ளைகளின் போராட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டியது உன் பொறூப்பு!!!


முருகா....
பத்துமலை முருகா.....

25 நவம்பர்,
உன் சன்னிதானத்தில்,
உன் முன் நடந்தவை எல்லாம் ஞாபகம் உள்ளதா???

இல்லை,
தைப்பூச குஷியில் அனைத்தையும் மறந்து விட்டாயா??

அப்பனே,
தமிழ்க்கடவுளே.......
நீயீன்றி அனுவும் அசையாது என்பார்களே??!!

நீ சொல்லித்தான்,
FRU வாகனமும்,கவசமனிந்த போலிசும்,
உன்னைக் கும்பிடும் தமிழனைத் தாக்கியதா???

புகைக் கொண்டும்,ரசாயன கலவைக் கொண்டும் தமிழன் தாக்கப்பாட்டானே,
அப்பனே,தமிழ் கடவுளே-அவ்வேளையிள்
வேல் கொண்டு உன் பிள்ளைகளை காப்பாற்றியிருக்க வேண்டாமா??

கண்ணீர் புகைப் பட்டதால்,
நீயும் கண்ணை எரிச்சலால் மூடிவிட்டாயா??
அல்லது,
கேடி நடராஜா உனக்கும் லஞ்சம் கொடுத்து வாயடைத்து விட்டானா???

அப்பனே,
உன் வழி வந்த தமிழன்,
உன்னை மட்டுமே நம்பும் தமிழன்,
சொல்கின்றேன் இன்று,

இவ்வள்ளவு நாளும் நாங்கள் பொறுத்து விட்டோம்,
இனி ஒரு நாளும் பொறுக்கோம்,
எங்களுக்கு விடியல் வேண்டும்!!!

பாவிகளை வதம் செய்!!!
எங்களின் குறைகளை தீர்த்து வை!!!

நடராஜா,
எங்கள் பணத்தை எடுத்துதான் உனக்கு திருப்பணி செய்தான்!!!
அதிலும் பாதியை விழுங்கி விட்டான்!!!

சாமிவேலு,
உன் பெயரை வைத்தே வருடா வருடம் அரசாங்க பணத்தை விழுங்குகிறான்!

இனிமேலும்,
நாங்கள் பொறுப்பதாய் இல்லை!!!
இந்த வருடம் பத்துமலையை புறக்கணிக்கிறோம்!!!
நீ கண்டுக் கொள்ளாவிட்டால்,
உன்னையும் புறக்கணிப்போம்!!!

முருகா,
எங்களின் குலத் தெய்வமே,
மண்டியிட்டு வேண்டுகிறோம்,
எங்கள் போராட்டத்தை வெற்றிப் பெறச் செய்!!!
எங்களின் சிங்கங்களை சீக்கிரம் வெளிக்கொண்டு வா!!!!

முருகன் சக்தியை நம்புகின்றோம்,
உன் சக்தி வெல்லுதோ,இல்லையோ,
மக்க்ள் சக்தி வெல்லும்!!!!

'ஆயுதப் போராட்டமாக மாறும் அபாயத்தில் மலேசியப் போராட்டம்


அமைதி முறையில் மகாத்மா காந்தியின் படங்களை கையில் ஏந்திக் கொண்டு தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்க மலேசிய அரசு மறுத்தால், தமிழர்களின் கோரிக்கைகளை புறக்கணித்தால், காந்திப் படங்களுக்குப் பதில் பிரபாகரன் படத்தை ஏந்தத் தமிழர்கள் தயங்க மாட்டார்கள்.

மலேசியத் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரு நாட்டுத் தமிழர்களுமே தங்களது உரிமைகளுக்காகவே போராடி வருகின்றனர்.

மலேசிய அரசின் இனவாத நடவடிக்கைகளால் தமிழர்கள் கொந்தளிப்பான நிலையில் உள்ளனர்.இப்போதைக்கு மலேசியத் தமிழர்களிடம் எந்தவித திட்டமும் இல்லை. தங்களது போராட்டத்தை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மலேசிய அரசு தீவிரமாக அமல்படுத்த முயன்றால் நிச்சயம் தமிழர்கள் பதிலடி கொடுப்பார்கள். - மலேசியாவின் கெபாங்சன் பல்கலைக்கழக(UKM) வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர் பி.ராமசாமி. (source :http://thatstamil.oneindia.in/news/2007/12/01/world-malayaian-tamils-may-choose-prabhakaran.html)

என்னைக் கேட்டால் பேராசிரியர் பி.ராமசாமி அவர்கள் கூறியிருக்கும் கருத்து 100% சரி என்று கூறுவேன்.

கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி கோலாலம்பூரில் போராட்டத்தின் போது,நான் சந்தித்த நண்பர் ஒருவர் கூறுகையில்,"அமைதி முறையில் மகாத்மா காந்தியின் படங்களை கையில் ஏந்திக் கொண்டு போராட்டம் நடத்தினால் கூட தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் அநியாயம் புரிகின்றார்கள்!!" என்று வெதும்பிய போது, நான் கூறினேன், "மகாத்மா காந்தி போதித்த அன்பு வழி இவர்களுக்கு புரியாது,இவர்களுக்கு பிரபாகரன் வழியில்தான் பதிலடி கொடுக்க வேண்டும்,நாம் மகாத்மா காந்தியின் படங்களை கையில் ஏந்தியிருக்கக் கூடாது,பிரபாகரன் படத்தை ஏந்தியிருக்க வேண்டும்!!" அப்போது அங்கிருந்த பலர்,கைத்தட்டி தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

ஆனாலும் மிகுந்த துணிச்சலுடைய தலைவரான அண்ணன் உதயக்குமாரின் தலைமையிலான நமது போராட்டம் அன்பு,அமைதி வழி போராட்டம் என்பதால் அமைதியாக இருக்கிறோம்,எங்கள் அமைதியை பயம் என நினைக்கவேண்டாம்.எங்களின் போராட்டம்,வெற்றி கனிகளை ஈட்டாமல் ஓயாது!!!

ஆளும் தேசிய முன்னனி அரசாங்கமே,தேசிய முன்னனி அரசாங்கத்தில் அடிமையாக அங்கம் வகிக்கும் மஇகாவே,மஇகாவின் (தரு)தலைவனான சாமிவேலுவே,உங்களின் பொய்களை நம்பி நாங்கள் ஏமாந்த காலம் மலை ஏறிவிட்டது!!!

எங்கள் விரக்தியின் உச்சத்தை நாங்கள் அடைந்த பொழுது எங்கள் தமிழ் கடவுள் முருகனே பார்த்து அனுப்பிவைத்தான் எங்கள் உரிமை சிங்கங்களை!!

போராட்டம் என்று வந்து விட்ட பிறகு,பிரிவுகளும்,சிறை வாசங்களும்,தூற்றல்களும்,கீழறுப்புகளும் இல்லமலா??

ஆனால்,எந்த போராட்டத்திலும் பிரிவுகளும்,சிறை வாசங்களும்,துற்றல்களும் நிரந்தரமல்ல,இவையெல்லாம் வெற்றி வாசலின் முதல் படிகள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது!!

தீயோர்களின் கீழறுப்புகள் உன்னதமான போராட்டத்தை ஒன்றும் செய்து விடாது!!

ஆகவே,எமது போராட்டத்தை ஒடுக்கி விடலாம்,அழித்து விடலாம் என்ற பகற்கனவு பழிக்காது!!

அமைதி போராட்டத்தை ஒடுக்க நினைத்து,ஆயுத போராட்டத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள் என்று மூடர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!!

எமதுரிமையை என்றும் இழக்க மாட்டோம்,சுதந்திரத் தீ எமக்குள் தொடர்ந்து எரியும்!!!

மக்கள் சக்தி வெல்லும்!!!