8/20/09

பினாங்கு துணை முதல்வர் இராமசாமி அவர்களின் வாழ்த்துசெய்தி

பினாங்கு இந்தியர் சங்கத்தின் 10வது ஆண்டு மும்மொழி போட்டிகளுக்கான சிறப்பு விழா மலருக்கு எனது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமைக் கொள்கிறேன்.பினாங்கு இந்தியர் சங்கம்,கடந்த 9 ஆண்டுகளாக பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக மும்மொழி போட்டிகளை நடத்தி வருகிறது என்பதை அறிந்து எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அதே வேளை இந்த 10வது ஆண்டு மும்மொழி போட்டிகள் சிறப்பே நடைப்பெற்று முடிவுற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பினாங்கு மாநிலத்தை அறிவார்ந்த மாநிலமாக திகழ வைக்க வேண்டும் என்பது,பினாங்கு மாநில அரசாங்கத்தின் இலட்சியங்களுள் ஒன்று.அறிவார்ந்த மாநிலத்தின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைவது மாணவ சமுதாயமே.பினாங்கு மாநிலத்தின் மாணவ சமுதாயம்,மிகச்சிறந்த மாணவ சமுதாயமாக அமைய வேண்டும் என்பதற்காக பினாங்கு மாநில அரசு பல்வேறு ஆக்ககரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் 1.5 மில்லியன் ரிங்கிட்டை பகிர்ந்தளிக்க மாநில அரசு முன்வந்துள்ளது.இதன் வழி தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களும்,அறிவார்ந்த சமுதாயத்தை நோக்கி செல்லும் பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்ற முடியும்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பளிகளின் வளர்ச்சியிலும்,தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சியிலும் பினாங்கு மாநில அரசின் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பது,பினாங்கு இந்தியர் சங்கம் போன்ற அமைப்புகளின் இவ்வாறான முயற்சிகளும்தான்.பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த பினாங்கு இந்தியர் சங்கம் ஏற்று நடத்தும் இந்த மும்மொழி போட்டிகள்,வருங்காலத்தில் மேலும் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்.

இவ்வேளையில்,தமிழ்ப்பள்ளி மாணவர்கள்,பேரறிஞர் அண்ணா கூறியதைப் போல "விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்".மலாய் மொழியையும்,ஆங்கில மொழியையும் சிறப்பாக கற்கும் அதே வேளை,நமது தாய்மொழியான தமிழ் மொழியை எக்காரணத்தைக் கொண்டும் புறந்தள்ளக் கூடாது என்பதை நினைவுறுத்துகிறேன்.

பினாங்கு இந்தியர் சங்கம் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடத்தி வரும் இந்நிகழ்வு சிறப்பான நிகழ்வாகும்.இந்த 10வது ஆண்டு மும்மொழி போட்டிகளை சிறப்பாக ஏற்ப்பாடு செய்துள்ள ஏற்பாட்டுக் குழுவினருக்கும்,அவர்களுக்கு முழு ஆதரவை வழங்கி வரும் பினாங்கு இந்தியர் சங்க செயற்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள் உரித்தாகட்டும். தொடரட்டும் உங்கள் சமுதாய சேவை. நன்றி.

இக்கண்,




பேராசிரியர் இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர்.